Wednesday, May 18, 2011

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்........

மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு மணமார்ந்த வாழ்த்துகள்...இனிமேல்தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் சகோதரி...இதற்கு முந்தைய உங்களின் ஆட்சியை அவ்வப்போது ஞாபகம் வைத்துக்கொண்டு ,,எதிர்கால தமிழ்நாட்டை வலிமை உள்ளதாகவும்  ,சக்தி மிக்கதாகவும் மாற்றுவீர்கள் என நம்புகிறோம்,,,..லஞ்சம்,ஊழல் ,சிபாரிசு  போன்றவை இப்போது தமிழ்நாட்டை கரையான் போல அரித்துக்கொண்டிருக்கிறது...மணற்கொள்ளை ,விலைவாசி உயர்வு,,ரவுடியிசம்,,மின்வெட்டு,,இவைதான் திமுகாவை மண்ணைக்கவ்வ வைத்தது...இதையெல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் ?  பழிக்கிப்பழி அரசியலை விட்டு  விடுங்கள்  .உங்களை தனிப்பெரும்பாண்மையுடன் ஜெயிக்க வைத்த தமிழக  மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் ?  ஏழைபாளை முதல் ஈழத்தமிழன் வரை எப்படி கரை சேர்க்கப் போகிறீர்கள்...?செயல்களில் காட்டி மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடிக்க மறுபடியும் ஒரு ( இல்லை நிறைய ) வாழ்த்துகள்